காவல்துறை சட்ட ஆலோசகர் பணிக்கு வழக்குரைஞர்கள் விண்ணப்பிக்கலாம்
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு சட்ட ஆலோசகராக பணியாற்ற, தகுதியுள்ள வழக்குரைஞர்கள் விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ள செய்தி:
மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு நிர்வாகத்திலும், குற்ற வழக்குகளிலும் ஆலோசனை வழங்குபவராக செயல்பட வழக்குரைஞர் தேவைப்படுகிறார். அவருக்கு மாத ஊதியமாக ரூ.20 ஆயிரம் வழங்கப்படும்.
சட்டப் படிப்பு முடித்து பார் கவுன்சிலில் உறுப்பினராக இருப்பவர்கள், மாவட்ட நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தில் குறைந்தது 5 ஆண்டு பணியாற்றிய, குற்ற வழக்குகளில் தொடர்பில்லாதவர்கள் இந்த பணிக்கு தகுதியானவர்கள்.
விருப்பமுள்ள வழக்குரைஞர்கள் தங்களது விண்ணப்பங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நவம்பர் 23-ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு சட்ட ஆலோசகராக பணியாற்ற, தகுதியுள்ள வழக்குரைஞர்கள் விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ள செய்தி:
மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு நிர்வாகத்திலும், குற்ற வழக்குகளிலும் ஆலோசனை வழங்குபவராக செயல்பட வழக்குரைஞர் தேவைப்படுகிறார். அவருக்கு மாத ஊதியமாக ரூ.20 ஆயிரம் வழங்கப்படும்.
சட்டப் படிப்பு முடித்து பார் கவுன்சிலில் உறுப்பினராக இருப்பவர்கள், மாவட்ட நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தில் குறைந்தது 5 ஆண்டு பணியாற்றிய, குற்ற வழக்குகளில் தொடர்பில்லாதவர்கள் இந்த பணிக்கு தகுதியானவர்கள்.
விருப்பமுள்ள வழக்குரைஞர்கள் தங்களது விண்ணப்பங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நவம்பர் 23-ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment