Search This Blog

Thursday, February 4, 2016

கிண்டி ஐ.டி.ஐ-யில் பணிமனை உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கிண்டி ஐ.டி.ஐ-யில்  பணிமனை உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

By வெங்கடேசன். ஆர்

First Published : 04 February 2016 03:18 PM IST

சென்னை, கிண்டியில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் அரசினர் தொடர் அறிவுரை மையம் ஆகியவற்றில் காலியாகவுள்ள பணிமுனை உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

செய்தி வெளியீடு எண்: 21  தேதி: 03.02.2016

பணி: பணிமனை உதவியாளர் COPA (Computer Operator & Programming Assistant)
தகுதி: பத்தாம் வகுப்பு மற்றும் தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
இனசுழற்சி: பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பொது முன்னுரிமை BC/MBC (GT Priority)

பணி: பணிமனை உதவியாளர் Fitter (MARC - Mechanic Refrigerator and Air Condifioning)
தகுதி: பத்தாம் வகுப்பு மற்றும் தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
இனசுழற்சி: பிற்படுத்தப்பட்டோர் முன்னுரிமையுள்ளவர் (அருந்ததியர் பெண்கள்) மற்றும் (அருந்ததியர் விதவைகள்) BC Priority & Non Priority

பணி: பணிமனை உதவியாளர் MARC (Mechanic Refrigerator and Air Condifioning)
தகுதி: பத்தாம் வகுப்பு மற்றும் தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
இனசுழற்சி: ஆதிதிராவிடர் (அருந்ததியர்) SC (A) Priority & Non Priority

பணி: பணிமனை உதவியாளர் Cutting & Tailoring) மகளிர் மட்டும்
தகுதி: பத்தாம் வகுப்பு மற்றும் தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
இனசுழற்சி: பொது முன்னுரிமை (GT Priority)

வயதுவரம்பும்: மேற்கண்ட அனைத்து பணிகளுக்கும் 01.07.2015 தேதியின்படி 18 - 32க்குள் இருக்க வேண்டும். ஆதிதிராவிடருக்கு 35க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: மேற்காணும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களது பெயர், கல்வித்தகுதி, தொழிற்நுட்ப கல்வி, சாதி விவரம், முன் அனுபவ விவரம், முகவரி, தொலைபேசி எண் போன்ற விவரங்களுடன் தங்களது விண்ணப்பத்தினை வருகின்ற 10.02.2016-க்குள் முதல்வர், அரசு தொழிற்பயிற்சி நிலையம், கிண்டி, சென்னை - 32 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment